இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !
பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, மார்கண்டேய கட்ஜு கடந்த வாரம், பத்திரிக்கையாளர்களோடு சந்திப்பு நடத்தி அதில் உரையாற்றினார். அவரது இந்த உரை, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் படிக்க வேண்டியது. முக்கியத்துவம் கருதி, மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில் தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன். தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னடைய பணியை சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் ப
கருத்துகள்