இஸ்லாமிய சகோதரர்களே...... நாம் மற்றவர்களை சார்ந்து இருப்பதைவிட வாருங்கள் நாம் சேர்ந்து இருப்போம் ! திருமா ! ! !


என் அருமை இஸ்லாமிய தோழர்களே
ஆண்டாண்டாய் மறுக்கப்பட்டு வந்த தலித் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் நமக்கு வேண்டும். திராவிட கட்சிகள் இஸ்லாமியர்களை கேவலம் ஓட்டுக்காக பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் காலி கவராக நினைத்துவிட்டனர். ஆகவே தான் விடுதலை சிறுத்தைகள் - இஸ்லாமிய கூட்டபைப்பும் சேர்ந்து ஒரு சமூக நல்லிணக்க கூட்டணியை அமைத்து உள்ளனர். பொதுவாக இஸ்லாமிய சகோதரர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருப்பர். அதனால் தான் திராவிட கட்சிகள் நம்மீது சவாரி செய்கின்றனர். இது நமக்கான அதிகாரம் அதிகாரத்தை பறிக்கின்றனர். இந்த நிலை நீடித்தால் நாளை வரலாற்றில் தலித் மாற்றும் சிறுபான்மை இனம் இருந்ததற்கான ஆதாரத்தையே அழித்து விடுவர். உங்களின் பலத்தை இந்த உள்ளாட்சி தேர்தலில் நிருபுயுங்கள். சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமிய சகோதரர் எஸ்.அமீர் மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார். ஈரோடு, கோவையிலும் இஸ்லாமிய கூட்டமைப்பு போட்டியிடுகிறது. உங்களின் அதிகாரம் உங்கள் கையில்.
இன்று திருமாவளவன் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர முடியாமல் போனதால் இஸ்லாமிய கூட்டமைப்பை சேர்த்து கொள்ளவில்லை. அரசியலில் இஸ்லாமியர் பெருமளவில் பங்கேற்கவேண்டும் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறார்......

இஸ்லாமிய சகோதரர்களே......
நாம் மற்றவர்களை சார்ந்து இருப்பதைவிட
வாருங்கள் நாம் சேர்ந்து இருப்போம்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?