எமேனேசுவரத்தில் தரை பாலத்திற்கு பதிலாக மேம் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன் !

பரமக்குடி நகரசபை தி.மு.க. வேட்பாளராக சேது கருணாநிதி (வயது26) அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் பட்டதாரி. இவருக்கு சுதாராணி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். முழு நேர அரசியல்வாதியாக உள்ளார். தற்போது இவர் தி.மு.க. நகர செயலாளராக இருந்து வருகிறார்.
வேட்பாளர் சேது கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:-
பரமக்குடி நகரசபை தி.மு.க. வேட்பாளராக அறிவித்த தி.மு.க. தலைவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் நகர சபை தலைவராக வெற்றி பெற்றால் பரமக்குடியில் உள்ள அனைத்து பிரச்சினை களுக்கும் தீர்வு காண் பேன். பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வந்து முழுமையாக நிறைவேற்ற பாடுபடுவேன். போக்குவரத்து நெரிசலை குறைக்க வைகை ஆற்றின் இருபுறமும் ரோடு வசதி ஏற்படுத்தி தர பாடுபடுவேன்.
எமேனேசுவரத்தில் தரை பாலத்திற்கு பதிலாக மேம் பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பேன். புதிய நகரசபை கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப் படும். மாநகராட்சிக்கு இணையாக பரமக்குடி நகரசபையை கொண்டுவர பாடுபடுவேன். எனவே வருகிற உள்ளாட்சி தேர் தலில் என்னை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள்

பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
ஆரம்பம் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனால் பதவிக்கு வந்த உடன் எல்லாதையும் மறந்துறாங்களே..............................

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இதுதான் ஊடகம் நடந்து கொள்ளும் முறையா ? பத்திரிக்கையாளர்கள் கவனத்திற்கு ! ! !

ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் !

நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன் ?