பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, மார்கண்டேய கட்ஜு கடந்த வாரம், பத்திரிக்கையாளர்களோடு சந்திப்பு நடத்தி அதில் உரையாற்றினார். அவரது இந்த உரை, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் படிக்க வேண்டியது. முக்கியத்துவம் கருதி, மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில் தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன். தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னடைய பணியை சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் ப...
த லித் மக்களுக்காக அயராது பாடுபட்ட தலித் இனத் தலைவர் தியாகி இமானுவேல் ஜாதிய வெறியர்களால் 54 ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். வெட்டி படுகொலை செய்யப்பட்ட செப்டம்பர் 11 ம் நாளை தலித் மக்கள் தலித் தியாகி தினமாக அனுசரித்து விருகின்றனர். சில ஆண்டுகளாக மற்ற அரசியல் கட்சிகளும் இமானுவேல் நினைவு தினத்தில் மரியாதை செய்ய தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டும் அப்படித்தான் அமைதியாக அனுசரிக்கப்பட்டு கொண்டிருந்தது. இந்த நிலையில் தான் இமானுவேல் நினைவிடத்தில் அஞ்சலி செய்ய வந்து கொண்டிருந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது அவரை வழி மறித்து போலிஸ் கைது செய்தது. இதை அறிந்து தான் அவரது ஆதரவாளர்கள் பரமக்குடியில் சாலை மறியல் செய்தனர். அப்போது நடந்த கலவரத்தில் 7 பேர் பலியானார்கள். பொது மக்கள் மீது தடியடி, துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டது யார்? கலவரம் ஏற்பட்டால் தொடக்கத்திலேயே துப்பாக்கி சூடு நடத்தலாமா? சிவகங்கையில் நடக்கும் தேவர் ஜெயந்திக்கு தமிழக முதல்வர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் வருவதால் போலிஸ் பாதுகாப்பை அதிகப்படுத்தி பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யு...
பரமக்குடி நகராட்சித் தலைவர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வியாழக்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். எமனேஸ்வரம் பகுதியில் ஜீவாநகர், கிறிஸ்தவத் தெரு, எஸ்.எஸ். கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு, பெருமாள் கோவில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் அவர் வாக்குச் சேகரித்தார். அதிமுக நகர் செயலாளர் எம்.கே. ஜமால், மாவட்டப் பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எஸ். சுந்தரராஜ் மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களும் தெருத்தெருவாகப் பிரசாரம் மேற்கொண்டனர். அதை போன்று பரமக்குடி 19 ,29 ,30 ஆகிய வர்டுஹளில் ம ம க வினர் தீவிர வாக்கு சேஹர்ரிபில் த மு மு க மற்றும் ம ம க வீனர்களுடன் சமுதாய ஆர்வம் கொண்ட சஹோதர்ஹலூம் கல பனி ஆற்றி கொண்டு இருக்கீறார்கள்
கருத்துகள்