பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, மார்கண்டேய கட்ஜு கடந்த வாரம், பத்திரிக்கையாளர்களோடு சந்திப்பு நடத்தி அதில் உரையாற்றினார். அவரது இந்த உரை, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் படிக்க வேண்டியது. முக்கியத்துவம் கருதி, மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில் தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன். தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னடைய பணியை சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் ப...
பரமக்குடி நகராட்சித் தலைவர் பதவிக்கான அதிமுக வேட்பாளர் எம். கீர்த்திகா முனியசாமி வியாழக்கிழமை பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். எமனேஸ்வரம் பகுதியில் ஜீவாநகர், கிறிஸ்தவத் தெரு, எஸ்.எஸ். கோவில் தெரு, பள்ளிவாசல் தெரு, பெருமாள் கோவில் தெரு உள்பட பல்வேறு இடங்களில் அவர் வாக்குச் சேகரித்தார். அதிமுக நகர் செயலாளர் எம்.கே. ஜமால், மாவட்டப் பொருளாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் எஸ். சுந்தரராஜ் மற்றும் கட்சி சார்பில் போட்டியிடும் வார்டு உறுப்பினர்களும் தெருத்தெருவாகப் பிரசாரம் மேற்கொண்டனர். அதை போன்று பரமக்குடி 19 ,29 ,30 ஆகிய வர்டுஹளில் ம ம க வினர் தீவிர வாக்கு சேஹர்ரிபில் த மு மு க மற்றும் ம ம க வீனர்களுடன் சமுதாய ஆர்வம் கொண்ட சஹோதர்ஹலூம் கல பனி ஆற்றி கொண்டு இருக்கீறார்கள்
காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக சொன்ன அன்னா ஹசாரே தீடீரென்று மெளன விரதம் இருக்க போவதாக சொன்னார். அதைக் குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், "கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் அன்னா குழுவில் உறுப்பினராக உள்ள பிரசாந்த் பூஷன் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளைத் தவிர்க்கவே அன்னா மெளனவிரதம் இருக்கிறார்" என்று கூறினார். "காங்கிரஸுக்கு எதிராக பிரசாரம் செய்ய போவதாக சொன்ன அன்னா ஹசாரே ஏன் பி.ஜே.பிக்கு எதிராக எதுவும் சொல்லவில்லை" என்று கேள்வி எழுப்பிய திக்விஜய் சிங், "குஜராத்தில் கடந்த 9 ஆண்டுகளாக லோக் ஆயுக்தா இல்லாமல் இருந்த போதும் அதைக் குறை கூறாமல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அன்னா புகழ்ந்தது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினார். "இது மாதிரி செயல்பாடுகளை இரட்டை நிலைப்பாடு என்று சொல்லாமல் எப்படி சொல்வது?" என்று கேட்ட திக்விஜய் சிங், "அன்னா, தனக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவு இருக்கிறது என்பதை ஒப்பு கொள்ள ஏன் மறுக்கிறார்?" என்றார். "அன்னாவோ தன் போராட்டத்தில் ஒரு ஆ...
கருத்துகள்